படப்பிடிப்பில் சந்தானத்தை பழிவாங்கிய ஆர்யா - திரண்ட மக்கள்
ஆர்யாவுக்கும், சந்தானத்துக்கும் உள்ள நட்பு திரைக்கு அப்பாலும் மிக உறுதியானது என்பதற்கு சான்றாக பல்வேறு சம்பவங்கள் இருந்தாலும், சமீபத்தில் பாண்டிசேரியில் நடந்த ஒரு சம்பவம் அதை உறுதிபடுத்தியது.
சந்தானம் மற்றும் ஆஷ்னா சவேரி நடிக்கும் இனிமே இப்படிதான் படப்பிடிப்பு பாண்டிசேரியில் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு அருகிலேயே ஆர்யா நடிக்கும் யட்சன் படத்தின் படப்பிடிப்பும் நடக்கிறது.
சந்தானம் சமீபகாலமாக தனக்கு ஈடுபாடு அதிகமுள்ள நடன காட்சியில் மும்முரமாக ஈடுப்பட்டு வந்தார். அந்த நேரம் அங்கு ஆர்யா வந்ததும் ஒரே களேபரம் தான்னாம். அவர்களைக்கான மக்கள் திரண்டு நின்றனராம்.
டான்ஸ் மாஸ்டர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஆர்யா, சந்தானத்திடம் இன்னும் நல்லா நடனம் ஆட வேண்டும் என நிர்பந்தித்து கொண்டே இருந்தாராம். நண்பர் அக்கறையில்தானே சொல்கிறார் என மீண்டும் மீண்டும் ஆடிய சந்தானத்துக்கு, தனது சக்தி மொத்தமும் இழந்து சோர்வு அடைந்த பின்னர் தான், ஆர்யா வேண்டுமென்றே அவ்வாறு செய்வதை உணர்ந்துக் கொண்டாராம்.திரையில், தான் ஆர்யாவுக்கு செய்ததற்கு பழி வாங்கும் முயற்சியாக, ஆர்யா தன்னிடம் இப்போது செய்வதை தெரிந்து கொண்ட சந்தானம், ஆர்யாவிடம் ஐயா சாமி போதும் உங்க விளையாட்டு, எனக்கூறி தெறித்து விட்டாராம்.

0 comments:
Post a Comment