Wednesday, March 25, 2015

நிரஞ்சனா புரெடக்சன்ஸ் வழங்கும் ‘தப்பா யோசிக்காதீங்க’ எனும் புதிய திரைப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படம் காலை 7.00 மணிக்கு படப்பிடிப்பு துவங்கி மாலை 6.00 மணியளவில் இயக்கி முடிக்கக் கூடிய 11 மணி நேரத்தில் எடுக்கப்படும் முதல் இந்திய தமிழ் திரைப்படம்.


அறிமுக இயக்குநர் சுல்தான்ஸ் இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு -எஸ்.ஆர். வெற்றி, இசை- ஸ்டீபன் சதீஷ். கலை சுரா
‘தென்றல்’ தொடரில் நடிக்கும் ராஜாதான் நாயகன். ஜோதிஷா, சனிலா நாயகிகள். சிசர் மனோகர், பேபி மோனிகா மற்றும் 40 நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரஸ் மீட் இன்று காலை நடைபெற்றது.
அப்போது பேசிய இயக்குநர் சுல்தான்ஸ், ”ஒருமனிதன் தற்காலிக பணியிடை நீக்கத்தில் இருந்தால் அந்தக் குடும்பத்தால் அவனுக்கு ஏற்படும் அவலங்கள் என்ன? பொருளாதார ரீதியாக தனிமைப் படுத்தப்படும் போது சந்திக்கும் இன்னல்களை அவன் எவ்வாறு எதிர்கொள்கிறான் சமாளிக்க எதைக் கையாள்கிறான் என்பதை படம் விளக்கும்.
இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவி உறவு உயர்வானது. அது சிறப்பாக நின்று நிலைக்க விட்டுக் கொடுத்தல் எவ்வளவு அவசியம் என்பதையும் கூறியிருக்கிறோம்.”என்றார்.
படப்பிடிப்பு அனுபவம் பற்றி சுல்தான்ஸ் கூறும்போது “இந்த ஒரு நாள் படப்பிடிப்புக்காக சரியாக யோசித்து முன்தயாரிப்புக்கு சரியாகத் திட்டமிட்டோம். ஒத்திகைகள் பல முறை பார்க்கப்பட்டன. இதில் நடித்த நடிகர் நடிகைகள் வெவ்வேறு படங்களில் தொடர்களில் நடித்துக் கொண்டிருப்பவர்கள்.
ஒரு நாள் ஒருவர் வந்தால் மறுநாள் இன்னொருவர் வரமாட்டார். அவரவர்க்கு வேலைகள் அப்படி. ஆனாலும் படப்பிடிப்பு நாளில் இன்று எல்லாரும் சரியாக வந்து நடித்து ஒத்துழைத்ததால் வெற்றிகரமாக முடித்து விட்டோம். பொதுவாக இப்படி விரைவாக எடுக்கும் படங்களில் டாக்கி போர்ஷன்தான் எடுக்கப் படும். இதில் 2 பாடல் காட்சிகளையும் எடுத்திருக்கிறோம்.” என்றார்.
தயாரிப்பாளர் அனில் குமார் கூறுகையில் “இயக்குநரின் திறமையையும் திட்டமிடலையும் நம்பி னேன். செய்து காட்டி விட்டார்.” என்றார். படப்பிடிப்பு முடிந்ததும். படக்குழுவினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர். தயாரிப்பாளருக்கு பேச்சே வரவில்லை.
ஆனந்தக் கண்ணீர் வந்து விட்டது. நாயகன் ராஜா கூறும் போது “சினிமா ஒரு கூட்டு முயற்சி என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். பலரிடம் படக்குழு கெடுபிடியாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.” என்றார்.

0 comments:

Post a Comment