
அவர் கூறும்போது,‘விஐபி பட குழுவின் அடுத்த பட ஷூட்டிங் தொடங்கியது. உங்கள் ஆதரவு தர கேட்கிறேன். இப்படம் விஐபி படத்தின் 2ம் பாகம் இல்லை‘ என்றார். ஷங்கரின் ஐ படத்துக்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகும் ‘மாஸ்' படத்தில் எமி ஜாக்சன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அதில் நயன்தாரா கதாநாயகியாக ஒப்பந்தம் ஆன பிறகு தனது காட்சிகள் குறைக்கப்பட்டதாக புகார் கூறினார் எமி. பின்னர் அப்படத்திலிருந்து வெளியேறினார். அவர் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் பிரணிதா நடிக்கிறார். மாஸுக்கு கொடுத்த கால்ஷீட்டையே தனுஷ் படத்துக்கு வழங்கியுள்ளாராம் எமி.
0 comments:
Post a Comment