எஸ்எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், வைப்ரன்ட் மூவீஸ் வெளியீட்டில் மார்ச் 13 ஆம் தேதி வெளிவர உள்ளது CSK – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா திரைப்படம். புதுமுக இயக்குனர் சத்திய மூர்த்தி இயக்கும் இப்படத்தில் ‘இனிது இனிது’ ஷரண், நாராயண், விமல் மற்றும் ‘ஆரோகணம்’ ஜெய் குஹைனி நடித்துள்ளனர்.
பிஎஸ்சி ஃபிலிம் டெக்னாலஜி மாணவியான ஜெய் குஹைனி எதிலும் புதுமையை தேடும் நாயகி. CSK படத்தில் நடித்த தனது அனுபவங்களை பற்றி அவர் இங்கே விவரிக்கிறார்.
“CSK படத்தில் கார்த்திகா எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தில் எனக்கு வசனங்கள் குறைவு. நடிப்பிற்கு இடம் அதிகமாகவே இருந்தது. நடிக்கவே வேண்டாம் என்று முடிவெடுத்தபோது இந்த கதையை இயக்குனர் சத்யா என்னிடம் கூறினார். உடனே முடிவை மாற்றிக்கொண்டேன்.
“200 லிட்டர் தண்ணீர் இருக்கும் டேங்கில் கைகால் கட்டி மூழ்க விட்டது, கையை கட்டி தரதரவென இரண்டு மாடிகள் இழுத்து சென்றது என ஒரு ஹீரோக்கு நிகராய் எனக்கு காட்சிகள் இருந்தன. இத்தகைய காட்சிகளில் டூப் போடாமல் நான் நடித்ததால் அங்கங்கே காயங்கள் ஏற்பட்டாலும் எனக்கு மிகவும் பிடிதிருந்தது.
“நாராயண் ஒரு காட்சியில் என்னை அறைய வேண்டும். அப்படி அறையும் பொழுது அவரது சட்டை பட்டனில் எனது நீண்ட முடி சிக்கிக் கொண்டது. அன்று முடிவெடுத்து எனது கூந்தலின் நீளத்தை குறைத்து விட்டேன்.
“CSK படத்தில் நடித்த பிறகு, ஏஞ்சலினா ஜோலி போல் ஒரு ‘Tom Boy’ கதாபாத்திரத்தில் அதிரடி சண்டை காட்சிகளுடன் நடிக்க வேண்டும் என்பது என் ஆசையாக மாறியுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் வரும் ‘உந்தன் முகம் பார்க்க’ பாடல் அனைவரையும் கவரும். இப்படத்தில் பல நபர்களின் நெடுநாள் உழைப்பு இருக்கிறது. அனைவரும் பார்க்கக் கூடிய குடும்பத் திரைப்படம். அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும்.”

0 comments:
Post a Comment