திரைப்பிரபலங்கள் பலரும் தற்போது ரசிகர்களிடம் எளிதில் தொடர்பு கொள்ள டுவிட்டர் சமூக வலைத்தளத்தை தான் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நேற்று காக்கிசட்டை படத்தின் வெற்றியை கொண்டாட டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
இதோ ரசிகர்களுக்கு அவர் அளித்த பதில்கள்
கேள்வி:ரஜினிமுருகன் படத்திற்கு பிறகு உங்களின் அடுத்த படம் என்ன?
பதில்: இன்னமும் நான் அது குறித்து முடிவு செய்யவில்லை.
கேள்வி: சமீப வருடங்களாகவே தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா என பி, சி வகுப்பு மக்களிடம் அதிகம் பேசப்படுவது நீங்கள் மட்டுமே ? என்ன செய்கிறீர்கள் அதற்கு?
பதில்: எனக்கு தெரிந்து பார்வையாளர்கள் என்னிடம் சிறப்பான இணைப்பில் உள்ளனர். பலரும் என்னை சகோதரனாக, நண்பனாக உணர்கீறார்கள். மேலும் காமெடியும் மற்றொரு காரணம்.
கேள்வி: தனுஷ் படங்களில் உங்களுக்கு பிடித்த படம்
பதில்: புதுபேட்டை.
கேள்வி: பாண்டிராஜ் தான உங்களுக்கு கே.பி?
பதில்: தேசிய விருது பெற்ற இயக்குநர் . அவரது படத்தில் எனக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது பெருமை.
கேள்வி: விஜய் சேதுபதியை உங்களுக்கு போட்டியாக நினைக்கிறீர்களா? அவரது படங்களில் உங்களுக்கு பிடித்த படம்?
பதில்: எனக்கு போட்டிகளில் நம்பிக்கை இல்லை. அவரது படங்களில் பீட்சா எனக்கு பிடிக்கும்.
கேள்வி: அஜித்தை சந்தித்த தருணம் பற்றி?
பதில்: அவருடன் 5 மணி நேரம் பேசினேன். வாழ்க்கைக்கு தேவையான தன்னம்பிக்கை கிடைத்தது போல் உணர்கிறேன்.
கேள்வி: விஜய்யை பற்றி உங்கள் கருத்து?
பதில்: அவர் Complete Entertainer
என்று இதுபோல் பல கேள்விகளுக்கு மனதில் தோன்றிய பதில்களை கூறினார்.
.jpeg)
0 comments:
Post a Comment