
இதுபற்றி அஞ்சலி கூறும்போது,‘முதன்முறையாக கன்னட படத்திற்கு டப்பிங் பேசுகிறேன். இம்மொழியில் ஒரு வார்த்தைகூட எனக்கு தெரியாது. ஆனால் இப்படத்தின் மூலம் டப்பிங் பேசும் பகீரத முயற்சியை மேற்கொண்டு சாதித்துகாட்டுவேன்' என்றார். மொழியே தெரியாமல் டப்பிங் பேச முடிவு செய்திருப்பது விபரீத முயற்சி. இப்போதைக்கு அந்த எண்ணத்தைகைவிட்டு மொழியை நன்றாக கற்றுக்கொண்டு அடுத்தடுத்த படங்களில் டப்பிங் பேசு என நெருக்கமானவர்கள் அஞ்சலிக்கு அட்வைஸ் கூறுகிறார்களாம். அவரோ அதை கண்டுகொள்ளாமல் நான் ஒரு தடவை சொன்னா.... பாணியில் பஞ்ச் டயலாக் பேசி வாயடைத்து விடுகிறாராம்.
0 comments:
Post a Comment