Sunday, June 7, 2015


மீடியாக்கள், அச்சுப் பத்திரிகைகள் எல்லாம் உச்ச நடிகரின் பேட்டிக்காக தவம் கிடக்கிறது. யாரையும் நோகடிக்க வேண்டாமே என்பதற்காக யாருக்குமே பேட்டி தராமல், பொது விழாக்களில் மட்டும் தன் கருத்துகளைக் கூறி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அவர் பரபரவென பட வேலைகளைச் செய்தாலும் அல்லது சும்மா இருந்தாலும் அவற்றை தலைப்புச் செய்திகளாக்கி பப்ளிசிட்டியை தேடிக்கொள்கிறது, மீடியா உலகம்.

ஆனால் தனது சமீபத்திய பட விவகாரத்தில் மீடியாவின் இன்னொரு முகம் பார்த்து படு அப்செட்டாகிவிட்டாராம். உண்மைக்கு சற்றும் சம்பந்தமில்லாத பல செய்திகளை யாரோ ஒரு முன்பின் அறிமுகமில்லாத நபர் கூற அவற்றை தலைப்புச் செய்திகளாக்கி வருவதை வேதனையுடன் நண்பர்களிடம் குறிப்பிட்டாராம்.

கடந்த 40 ஆண்டுகளாக தன்னை, தன் பட வியாபாரத்தைப் பார்த்து வரும் மீடியா உலகம், குறைந்தபட்ச உண்மை என்னவென்பதை கூட விசாரிக்காமல், சமீபத்திய பட விவகாரத்தில் இப்படி செய்திகள் வெளியிடுகின்றனரே என வருத்தப்பட்டாராம்.

இவரை விட இவரது ரசிகர்களுக்கு தான் பல மடங்கு வருத்தமாம். ஏற்கெனவே குறிப்பிட்ட இரு பத்திரிகைகளின் ஆயுள்கால சந்தாவைக் கூட ரத்து செய்துவிட்டு, கார சாரமாக அவற்றின் நிர்வாகங்களுக்கு கடிதங்கள் அனுப்பி வருகின்றனராம்.

தங்கள் தலைவருக்கு எதிராக தொடர்ந்து இந்த பத்திரிகைகள் செய்தி, கிசுகிசு பாணியில் மோசமான செய்திகளை வெளியிட்டால் அவற்றை சாலைகளில் குவித்து எரிக்கும் போராட்டத்தைத் தொடங்கவும் முடிவு செய்துள்ளார்களாம் ரசிகர்கள்.

0 comments:

Post a Comment