Monday, June 1, 2015

திரிஷா-ராணா இணையதள ரொமான்ஸ் திரையுலகில் பரபரப்பு

ராணாவுடன் காதல் பிரேக் அப் ஆகி வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் வரை சென்ற திரிஷா, திடீரென்று அதையும் ரத்து செய்தார். இந்த விவரம் தெரிந்த மறுநிமிடமே மாஜி காதலன் ராணா மணக்கோலத்தில் அமர்ந்திருப்பதுபோல் இணைய தளத்தில் போட்டோவை வெளியிட்டிருந்தார். அடுத்து திரிஷா பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த திரிஷா, ‘தேங்க்ஸ் சைக்கோ’ என்று செல்லமாக குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்தில் நடந்த மோகன் பாபு குடும்ப திருமண விழாவில் ராணா, திரிஷா தனிமையில் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இதையடுத்து இருவருக்கும் மீண்டும் காதல் மலர்வதாக பேச்சு எழுந்துள்ளது. சமீபத்தில் பாஹுபலி படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதில் ராணா நடித்திருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. மாஜி காதலனுக்கு திரிஷா வாழ்த்து சொல்வாரா? மாட்டாரா? என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப கமென்ட் வெளியிட்டிருக்கிறார் திரிஷா.

‘பாஹுபலி டீசர் பெரிதாக கவர்ந்திருக்கிறது. ராக் ஸ்டார் நீங்களும்தான்’ என குறிப்பிட்டிருக்கிறார். ராக் ஸ்டார் என ராணாவைத்தான் அவர் குறிப்பிட்டிருக்கிறாராம். அதற்கு பதில் மெசேஜ் அனுப்பிய ராணா ‘தேங்க்யூ பெஸ்டஸ்ட்’ என கூறி உள்ளார். ஹீரோயின்களில் மிகச்சிறந்தவர் திரிஷா என்பதை குறிக்கவே பெஸ்டஸ்ட் என்ற வார்த்தையை ராணா பயன்படுத்தி இருக்கிறாராம். திரிஷா - ராணா இப்படி நெட்டிலே ஒருவரை ஒருவர் நட்பு ரீதியில் பாராட்டிக்கொள்வதாக தெரிந்தாலும் இருவருக்கும் இடையே மீண்டும் ரொமான்ஸ் ஸ்டார்ட் ஆகிவிட்டதாகவே கூறப்படுகிறது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment