ஜே.எஸ்.கே.சதீஷ், லியோ விஷன்ஸ் மற்றும் 7C’s என்டர்டெய்ன்மெண்ட் Pvt. Ltd., இணைந்து தயாரித்துள்ள படம் ’நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’.
இப்படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார். ஸ்ரீகிருஷ்ணா இதனை இயக்குகிறார். இப்படம் முடியும் நிலையில் உள்ளது. இந்தப் படத்தின் அனுபவங்கள் பற்றி நடம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் நடிகை ரம்யா நம்பீசன்.
“நாலு போலிசும் நல்ல இருந்த ஊரும்’ ஒரு சிறந்த பயணமாகவும் அனைத்தையும் கற்று கொள்ளும் வாய்ப்பாகவும் எனக்கு அமைந்தது. இப்படத்தில் நான் ஒரு ஸ்கூல் டீச்சராக வருகிறேன். ‘குள்ள நரி கூட்டம்’ திரைப்படத்துக்கு பிறகு கிராமத்து சாயலில் எனக்குக் கிடைத்திருக்கும் கதாப்பாத்திரம் இது. நான் இது போன்ற ஒரு நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என ரொம்ப நாளாக காத்திருந்தேன். இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா இந்த கதையைச் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, சற்றும் யோசிக்காமல், நடிக்க ஒப்பு கொண்டேன்.
இப்படத்தின் தயாரிப்பாளர்கள் பல நல்ல படங்களை தயாரித்துள்ளனர். ஜே.எஸ்.கே இப்படத்தை தயாரிக்கிறார் என்று தெரிந்ததும் மிக மகிழ்ச்சியாய் இருந்தது. படங்களை அவர் தேர்ந்தெடுக்கும் விதமும் அப்படங்களை அவர் திரைப்பட விழாக்கள், விருதுகள் என வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லும் விதத்தையும் கண்டு நான் வியந்துள்ளேன்.
அருள்நிதியுடன் நடிக்கும்போது ஆரம்பத்தில் பயமாக இருந்தது. பெரிய சினிமா பின்புலம் கொண்ட நடிகர்.. எனினும், அனைவரிடமும் கனிவாக நடந்து கொள்வார். இன்னமும் எனக்கு தமிழில் உச்சரிப்புகள் சற்று தடுமாற்றமே.. அத்தகைய நேரங்களில் வசனத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து உதவினார்.
“இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘காதல் கனிரசம்’ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இப்பாடல் வண்ண மயமாக, மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் அனைவரையும் சிரிக்க வைக்கும், முழுக்க முழுக்க குழந்தைகளுக்கு பிடிக்கும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நான் எந்த பாடலும் பாடவில்லை. மேலும், மலையாளத்தில் இரண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன். தமிழில் இசை நிகழ்ச்சிகள் செய்ய ஆர்வம் உள்ளது. நேரம் கூடினால் கண்டிப்பாக அதையும் செய்வேன்..” என்று சொல்லி முடித்தார் ரம்யா நம்பீசன்.
0 comments:
Post a Comment