விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் 'புலி' படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த செய்தியை புலி படத்தின் தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது.
புலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே.டி ஸ்டுடியோஸ் நிறுவனம் இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'புலி படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக வெளிவந்துள்ள தகவல் முற்றிலும் வதந்திதான் என்றும், இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் மட்டுமே நடித்து வருவது தான் உண்மை' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புலி படத்தில் படப்பிடிப்பு நாளையுடன் முடிவடைவதாகவும், அதன் பின்னர் படக்குழுவினர் கேரளா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சிம்புதேவன் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப், ஸ்ரீதேவி, பிரபு உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
புலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே.டி ஸ்டுடியோஸ் நிறுவனம் இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'புலி படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக வெளிவந்துள்ள தகவல் முற்றிலும் வதந்திதான் என்றும், இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் மட்டுமே நடித்து வருவது தான் உண்மை' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புலி படத்தில் படப்பிடிப்பு நாளையுடன் முடிவடைவதாகவும், அதன் பின்னர் படக்குழுவினர் கேரளா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சிம்புதேவன் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப், ஸ்ரீதேவி, பிரபு உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
0 comments:
Post a Comment