Saturday, February 28, 2015

g.v.prakashடார்லிங் படத்தையடுத்து ஜி.வி.பிரகாஷ் தற்போது பென்சில் மற்றும் த்ரிஷா இல்லனா நயன்தாரா ஆகிய படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதில் பென்சில் படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.

இது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறியதாவது, “நடிப்பிற்காக எனக்குள் இருக்கும் சிறு சிறு கூச்சங்களை விட நேர்ந்தது. அது ஒரு இமாலய சவாலாய் இருந்தது. தொடக்கம் முதலே ஒரு பயம் கலந்த சந்தேகம் இருந்துக்கொண்டே இருந்தது.
‘டார்லிங்’ படம் மூலம் மக்கள் என்னை ஒரு நடிகனாக ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. அடுத்து ‘பென்சில்’ வெளி வர தயாராக உள்ளது’ “தற்பொழுது cameo films சார்பில் ஜெயகுமார் தயாரிக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.
இயக்குனர் ஆதிக் எதை எப்போ செய்வாரென்றே தெரியாது. அவர் இந்த படத்தின் டைட்டில் சொல்லும்போதே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இப்படத்தில் எனது கதாப்பாத்திரம் மிகவும் பேசப்படும்.. எளிதில் இந்த கதாப்பாத்திரம் அனைவரையும் கவரும்.
இப்படம் அதன் கதைக்காகவும், அதன் கதாப்பாத்திரங்களுக்காகவும் பேசப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளமே மிகவும் உற்சாகமானது. அந்த உற்சாகம் படம் முழுக்க நிறைந்து இருக்கும். விரைவில் இசையுடன் ‘கம்மிங் ஒன் தி வே டி செல்லக் குட்டீஸ்” என்று தனது மென்மையான சிரிப்புடன் விடைபெற்றார் ஜி.வி.பிரகாஷ்.

0 comments:

Post a Comment