வரம்பு மீறிய மாடல் அழகிகள் - சீறிப்பாய்ந்த தமன்னா
தமன்னா சாந்தமானவர் எத்தனை டேக் சொன்னாலும் கோபப்படாமல் நடிப்பவர் என்று இன்டஸ்ரியில் நல்ல பெயர் வாங்கியிருக்கிறார். ஒரு குரூப் படுத்திய பாடு அவரை கோபத்தில் கொந்தளிக்க வைத்துள்ளதாம்.
தமன்னா, சமீபத்தில் டோலிவுட் படமொன்றின் வெளிப்புற படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார். அப்படத்தின் பாடல் காட்சிக்காக சில மாடல்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். அழகு தேவதைகளாக வந்திறங்கிய மாடல்களுடன் அவர்களது பாய்பிரண்ட் சிலரும் வந்திருந்தனராம். வெளிப்புற படப்பிடிப்பு என்றுகூட பார்க்காமல் அவர்கள் ஜோடி ஜோடியாக நின்றுகொண்டு சேட்டையில் ஈடுபட்டனராம்.
ஜோடிகள் வரம்புமீறி ஆபாச செயலில் ஈடுபடத் தொடங்கியதும் கோபம் அடைந்த தமன்னா, அவர்களிடம் சென்று வெளிப்புற படப்பிடிப்புக்கு வந்து இதுபோல் அநாகரீகமாக நடந்துகொள்வது முறையல்ல. நீங்கள் ரொமான்ஸ் செய்வதென்றால் நான்கு சுவற்றுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்று சீறிப் பாய்ந்தாராம்.
பின் மாடல் அழகிகள், தமன்னா தனது கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அவரிடம் இதை சொல்லி வையுங்கள் என்று இயக்குனரிடம் முறையிட்டனராம். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டராம்.
0 comments:
Post a Comment