Wednesday, February 25, 2015


பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இந்தி நடிகர் சல்மான் கான் கடந்த 1998ம் ஆண்டு, ஹம் சாத் சாத் ஹெய்ன் என்ற இந்தி திரைப்பட படப்பிடிப்பிற்காக ஜோத்பூர் சென்றபோது, ஜோத்பூர் அருகே உள்ள கன்கனி என்ற கிராமத்தில் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்கினமான மான்கள் இரண்டை சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் மீது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், பயன்படுத்தியதாகவும் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில், கடந்த 16 வருடங்களாக நடைபெற்றும் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. எனவே நீதிமன்றத்தில் சல்மான்கான் இன்று ஆஜராக உள்ளதாகவும், இதில் அவருக்கு அதிகபட்சமாக 5 வருட சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment