சூர்யா நடிக்கும் புதிய படமான '24'- ன் இசையமைப்பு வேலைகளைத் தொடங்கிவிட்டார் ஏ ஆர் ரஹ்மான். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரணிதா நடித்து வரும் படம் ‘மாஸ்'. இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளன.
இந்நிலையில் அடுத்து விக்ரம் கே குமார் இயக்கத்தில் '24' என்ற படத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்த படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். ‘சில்லுன்னு ஒரு காதல்' படத்திற்கு பிறகு 9 வருடங்கள் கழித்து சூர்யா படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்தப் படத்துக்கான இசைப் பணிகளை ஏ.ஆர் ரஹ்மான் தொடங்கிவிட்டார். விக்ரம் கே குமார் இயக்கத்தில் வெளியான ‘யாவரும் நலம்' மற்றும் தெலுங்கில் ‘மனம்' என இரண்டுமே வித்யாசமான கதையம்சத்தில் அமைந்த படங்கள் என்பதால், சூர்யா விரும்பி அவரை தன் படத்தை இயக்க அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
cinema
»
cinema.tamil
»
rahman
»
suriya
» சூர்யா படத்துக்கு இசையமைக்கத் தொடங்கினார் ஏ ஆர் ரஹ்மான்
Wednesday, February 11, 2015
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment