முன்னணி நடிகையின் நான்காவது காதலும் புஸ்ஸாகிவிட்டது. கேரளாவில் இருந்து கோலிவுட் வந்தவர் அந்த நட்சத்திர நடிகை. வந்த வேகத்தில் பெரிய நடிகர்களுடன் நடித்தார். இந்நிலையில் அவர் இளம் நடிகர் ஒருவரை காதலித்து வம்பில் சிக்கினார். அந்த காதல் முறிந்த பிறகு சோகத்தில் இருந்த நடிகைக்கு மீண்டும் காதல் ஏற்பட்டது.
நடிகையின் இரண்டாவது காதல் டான்ஸ் ஆட அவர் மீண்டும் சிங்கிள் ஆனார். இந்த நேரத்தில் தான் அவர் அழுக தோள் கொடுத்தார் ஒரு இளம் ஹீரோ. இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்றார்கள். ஆனால் அவர்கள் காதலர்கள் என்று ஊர் உலகமே தெரிவித்தது. அந்த காதலும் பாஸ் ஆகவில்லை.
இந்நிலையில் தான் நடிகைக்கும் பாடிபில்டர் நடிகருக்கும் இடையே காதல் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் பாடிபில்டரோ டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுடன் செட்டிலாகிவிட்டார். அவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள உள்ளனர். நடிகையின் மூன்று காதல்களை போன்றே நான்காவது காதலும் புஸ்ஸாகியுள்ளது. இதற்கிடையே நடிகை தனது முதலாவது காதலரையே திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக வேறு பேசப்படுகிறது.
Wednesday, February 11, 2015
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment