மகதீரா, ரச்சா போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ராம் சரண் தேஜா.
ஆந்திர சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான இவர் இவர் நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர்களுக்கு அவர் 'சனிக்கிழமை விருந்து' கொடுத்துள்ளார்.
இவரது வீட்டு மொட்டை மாடியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் விடிய விடிய நடந்த இந்த மது விருந்து ஒரே கூச்சலாக இருந்துள்ளதால் அக்கம் பக்கத்தினர் பொலிசாரிடம் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், ராம் சரணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment