
தனுஷ் நடிப்பில் இந்த மாதம் ரிலீஸாகவிருக்கும் படம் அனேகன். இந்த படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் தான் கூறினார் இயக்குனர் கே.வி.ஆனந்த் ஆனால் சில காரணங்களால் இந்த கூட்டணி சேர முடியாமல் போனது.
தற்போது இது குறித்து இயக்குனர் கே.வி.ஆனந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் விவரமாக கூறியுள்ளார். அந்தப் பேட்டியில், “மாற்றான்’ முடிந்ததும், விஜய்க்காக சில தயாரிப்பாளர்கள் என்னிடம் கதை கேட்டார்கள். அந்த நேரத்தில் உடனே என்னிடம் எந்த கதையும் இல்லை. ஒரு கதையை தயார் செய்து அதற்கு டயலாக், ஸ்கிரீன்பிளே எல்லாம் முழுவதும் ரெடியான பிறகு இந்த கதைக்கு எந்த நடிகர் பொருத்தமாக இருப்பாரோ அவரிடம் சொல்வேன். இதுதான் என் வழக்கம்.
அதேபோல அனேகன் இந்தக் கதையை முழுவதும் முடித்து விட்டு விஜய்யை சந்தித்து கதையை சொன்னேன். விஜய்க்கு இந்த கதை மிகவும் பிடித்து விட்டதாம். ‘ரொம்ப நல்ல லவ் சப்ஜெக்ட்டுதான். பண்ணலாம்.. ஆனால் இப்பத்தான் ஜில்லாவுக்கு கால்ஷீட் கொடுத்தேன். அது முடிந்தவுடனே கத்தி பண்றேன். அதுக்குப் பிறகு பண்ணலாம் என்றால் லேட்டாகும். சரி உங்களுக்கு எத்தனை நாள் வேண்டும்?’ என்று கேட்டார். ‘எப்படியும் 124 நாட்கள் ஆகலாம்..’ என்றேன்.
மறுநாள் கூப்பிட்டு பேசும்போது ‘இரண்டு படங்களிலிருந்தும் 65 நாட்கள் அட்ஜஸ்ட் பண்ணித் தர முடியும். அதுக்குள்ள பண்ண வாய்ப்பு இருக்கான்னு பாருங்கள்?’ என்றார் விஜய். கதை மேல் அவருக்குள்ள ஈடுபாடு கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் 124 நாட்களில் செய்தால் நல்லா சிறப்பாகச் செய்ய முடியும் என்று எடுத்துச் சொன்னதும், ‘சரி.. அடுத்து இன்னொரு நல்ல சப்ஜெக்ட்ல சந்திப்போம். படம் பண்ணுவோம்..’ என்று சொல்லியனுப்பினார்.
அதன் பிறகு தனுஷை சந்தித்து இந்த கதையை சொன்னதும் அவர் மற்ற படங்களின் தேதியை ஒதுக்கி உடனே கால்ஷீட் கொடுத்தார்”… என்றார்.
0 comments:
Post a Comment