Saturday, May 2, 2015


வை ராஜா வை விமர்சனம் – அவரை காமெடி பீசும் ஆக்கியிருக்கிறார்கள்

3 படத்தை இயக்கி திறமை காட்டிய ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 2வது படம் வை ராஜா வை. மே தினத்தில் வெளியாகியிருக்கும் வை ராஜா வை ஆட்டம் எப்படி இருக்கிறது…?

அடுத்து நடக்கக் போவதை முன்பே தெரிந்து கொள்ளும் அசாதாரணமான ஒரு திறன் கார்த்திக் (கவுதம் கார்த்திக்)க்கு இருக்கிறது. இந்த திறன் குறித்து அவனது சிறு வயதிலேயே தெரிந்து கொள்ளும் கார்த்திக்கின் அப்பா, அதை எந்த ஒரு நேரத்திலும் பயன்படுத்தக் கூடாது என்று சத்தியம் வாங்கிவிடுகிறார். படித்து விட்டு வேலை தேடும் கார்த்திக்குக்கு அவனது நண்பன் சதீஷ் (சதீஷ்) மூலமாக அவன் வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே வேலையும் கிடைக்கிறது. தான் வேலை பார்க்கும் நிறுவனத்தை நிறுவன கணக்கு விஷயத்தில் தன் திறனை பயன்படுத்தி பிரச்சினையில் இருந்து தப்ப வைக்கிறார் கார்த்திக். இந்த சம்பவத்தினால் இவருடன் வேலை பார்க்கும் பான்டா (விவேக்)க்கு கார்த்திக்கிடம் இருக்கும் தனித் திறன் பற்றி தெரிந்துவிடுகிறது. கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தவிக்கும் பான்டா கார்த்திக்கை பயன்படுத்தி தான் இழந்த பணத்தை மீட்க நினைக்கிறார். கார்த்திக்கிடம் பேசி தனக்காக சூதாட்டத்தில் கலந்து கொள்ள வைக்கிறார். சூதாட்டத்தில் விளையாடி ஏகப்பட்ட பணம் ஜெயிக்கிறார்கள். இனிமேல் சூதாட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்று முடிவு எடுக்கும் கார்த்திக்கை சூதாட்டத்தை நடத்தும் பாலாஜி மீண்டும் சூதாட்டத்தில் கலந்து கொள்ள வற்புறுத்துகிறார். இல்லையென்றால் கார்த்திக்கின் காதலியையும் குடும்பத்தையும் போட்டுத் தள்ளிவிடுவேன் என்று சொல்லி மிரட்டும் பாலாஜிக்காக சூதாட்டத்தில் கார்த்திக் கலந்து கொண்டானா? பாலாஜி பிடியில் இருந்து தப்பித்தானா? என்பது மீதி கதையும்… தொடர்வது போன்று முடியும் முடிவும்…

0 comments:

Post a Comment