குறைவான வசனங்களில் சொல்ல வந்தது நிறைவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆழ்ந்து ஒலிக்கும் இசை பார்ப்பவர்கள் மனதின் வழி ஊடுருவித் தாங்கவியலாப் பாரமொன்றை இறக்கி வைத்து விட்டுச் செல்கிறது.
எப்போதுமே, நம்மைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்ற நினைப்புதான் நம்மை அதிகம் அலைக்கழிக்கிறது; காயப்படுத்துகிறது. சுய பரிசோதனை தேவையோ என்று எண்ண வைக்கிறது.
வாழ்க்கையை நாம் பார்க்கும் பார்வையின் மூலமே மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக் கொள்ள முடியும். நாம் எல்லோருமே நம் மனசைத்தான் முதலில் செல்ஃபி எடுக்க வேண்டும். தகுந்த காட்சியமைப்புகளோடு, தன்னை உணர்தலை மென்மையாய் உணர்த்துகிறது ஆகாஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட செல்ஃபி குறும்படம்.
0 comments:
Post a Comment