கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய அஜித் - ஆச்சர்யத்தில் திரையுலக பிரபலங்கள்
அஜித் தன் திரைப்பயணத்தில் வளர்ந்து வந்த போது நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்காக பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இடையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக நிரந்தரமாக பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் மீண்டும் அஜித், சண்டையை மறந்து நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், இப்படத்தை அஜித்தின் வெற்றிப்பட இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கவிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த செய்தி அறிந்த பல திரைப்பிரபலங்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

0 comments:
Post a Comment