உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்து நடிக்கவுள்ள 'தூங்காவனம்' படத்தின் முன்னோட்ட பணிகள் வெகுமும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா உள்பட மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் மெளனகுரு' படத்தில் பெண் போலீசாகவும், மரியான் படத்தில் முக்கிய வேடம் ஒன்றிலும் நடித்த நடிகை உமா ரியாஸ்கான், 'தூங்காவனம்' படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
நடிகை உமா ரியாஸ்கான், கடந்த 14 வருடங்களுக்கு முன்பே கமல்ஹாசன் நடித்த 'அன்பே சிவம்' படத்தில் மெஹரூன்னிஸா என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் ரசிகையாக இருந்து வரும் உமா ரியாஸ்கான், 14 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன், த்ரிஷா, மனிஷா கொய்ராலா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கின்றார். ராஜேஷ் இயக்கவுள்ள இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.


0 comments:
Post a Comment