தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் அஜித்தும் ஒருவர். இவர் தன் திரைப்பயணத்தில் வளர்ந்து வந்த போது நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்காக பல படங்களில் நடித்தவர்.
ஆனால், இடையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மன கசப்பு நிரந்தரமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில் மீண்டும் அஜித், சண்டையை மறந்து நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக ஒரு செய்தி உலா வருகின்றது.
மேலும், இப்படத்தை அஜித்தின் வெற்றிப்பட இயக்குனர் விஷ்ணுவர்தன் தான் இயக்கவிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த செய்தி அறிந்த பல திரைப்பிரபலங்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தான் வாலு படத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment