தமிழ், இந்தியில் உருவாகும் படத்தைத் தயாரிக்கிறார் பிரபுதேவாநடன இயக்குனராக அறிமுகமாகி நடிகர் ஆனவர் பிரபுதேவா. பிறகு சித்தார்த், த்ரிஷா நடித்த ‘நுவ்வொஸ்தானன்டே நேனொத்தன்டனா’ என்ற தெலுங்கு படம் மூலம் இயக்குனர் ஆனார். பின் தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி ஆகிய படங்களை இயக்கினார். சல்மான்கான் நடித்த ‘வான்டட்’ படம் மூலம் இந்திக்குச் சென்ற அவர், அங்கு முன்னணி இயக்குனராக உள்ளார்.இதையடுத்து இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார் பிரபுதேவா. தமிழ், இந்தி மொழியில் அவர் தயாரிக்கும் படத்தை விஜய் இயக்குகிறார். இதில் பிரபுதேவா ஹீரோ. முன்னணி இந்தி நடிகை ஒருவர் ஹீரோயினாக நடிக்கிறார். தற்போது ‘இது என்ன மாயம்’ படத்தை இயக்கி உள்ள விஜய், அடுத்து இந்தப் படத்தை இயக்குகிறார். இது ஹாரர் படம் என்று கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment