Wednesday, May 13, 2015

சிவகார்த்திகேயன் தற்போது இரண்டாம் கட்ட நடிகர்களில் முதல் வரிசையில் உள்ளவர். பல இயக்குனர்கள் இவரின் கால்ஷிட்டிற்காக தான் வெயிட்டிங்.

இந்நிலையில் இவரை சினிமாவில் மெரினா படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ். இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் கேடி பில்லா கில்லாடி ரங்காவிலும் நடித்தார். இப்படத்தையும் பாண்டிராஜ் தான் இயக்கியிருந்தார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவாகார்த்திகேயன் இரண்டு படங்களிலும் குறைவான சம்பளத்தில் தான் நடித்து கொடுத்தாராம். ஆனால், தற்போது இவரின் சம்பளம் ரூ 5 கோடியை தாண்டுகிறதாம் . இந்த நேரத்தில் பாண்டிராஜ், சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையலாம் என்று முடிவெடுக்க, இவரோ பயத்தில் உறைந்து விட்டாராம். ஏனெனில் குருநாதர் என்பதால் சம்பளம் பற்றி பேச முடியது அல்லவா.

0 comments:

Post a Comment